Tuesday, August 4, 2015

வெள்ளந்தி மனிதன் விஜயகாந்த்: சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு

விஜயகாந்த் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும்போது கண்ணீர்வழிய கதறி அழுததை பார்த்த பலர் இணையத்தில் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜய்காந்தை கேலி செய்வதற்கு என்றே பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எண்ணற்ற தனி பக்கங்களை நெட்டிசன்கள் திறந்துள்ளனர்.
அவர் மதுப்பழக்கம் உடையவர் என்று கூறி கேலி செய்து பல மீம்ஸ்-களை உருவாக்கியும், வீடியோக்களை உருவாக்கியும் பரப்பி வந்தனர்.
விஜயகாந்த் என்றாலே கோபக்காரர், நிதானம் இல்லாதவர் என்ற எண்ணத்தையும் அனைவரது மனதிலும் தோன்ற செய்தனர்.
இந்நிலையில், ”மக்களின் குடியரசு தலைவர்” அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும்போது அவர் கண்ணீர்வழிய கதறி அழுததை பார்த்த பலர் மனமாற்றம் கொண்டுள்ளனர்.
இப்போதுதான் விஜயகாந்தின் வெள்ளந்தியான, நியாயமான கோபமும் உலகத்தின் கண்களுக்கு அப்பட்டமாய் தெரிய ஆரம்பித்துள்ளதாகவும் அவருக்கு ஆதரவாக பல நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment