Monday, August 3, 2015

அபயகிரி விகாரையில் மைத்திரி மற்றும் ரணிலின் ஓவியம்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அபயகிரி விகாரையில் வழிப்பாட்டில் ஈடுபட்டதை காட்டும் சுவர் ஓவியம் ஒன்று அந்த விகாரையில் வரையப்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட அபயகிரி விகாரையின் தாதுகோபுரத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான பக்தர்கள் வழிப்படுவதை போன்று இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
அபயகிரி விகாரையின் விகாராதிபதி பல்லேகம சிறினிவாச நாயக்க தேரர் இதனை வரைந்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அபயகிரி விகாரையின் தாதுகோபுரம் புனரமைக்கப்பட்டு, கடந்த 31 ஆம் திகதி எசல பௌர்ணமி தினத்தில் ஜனாதிபதியினால் முதலாவது பூஜை நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment