அன்னை மடியில் : 1 பெப்ரவரி 1988 — ஆண்டவன் அடியில் : 3 ஓகஸ்ட் 2015
ஜெர்மனியைப்
பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவிதன் பிரேம்குமார்
அவர்கள் 03-08-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உடுவிலைச் சேர்ந்த பிரேம்குமார் யோகேஸ்வரி(ஜமுனா) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சீனிவாசகம்(இளைப்பாறிய திருமண பதிவாளர்), சந்திராதேவி(கனடா)
தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான கனகரட்ணம்(இளைப்பாறிய ஆசிரியர்)
இராசமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுபிதா, சஞ்சீவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீஸ்வரி, சந்திரகுமார், வசந்தகுமார், விஜயகுமார், இந்திரகுமார் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
செல்வகுமாரி, சித்திரகுமாரி, ஜெகதீஸ்வரன், இராமேஸ்வரன், இரட்ணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment