Monday, August 3, 2015

கடற்கரையில் விளையாடிய 9 வயது சிறுமையை அழைத்து காமலீலை: ஜானதீபன் கைது !


9 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு 47 வயது நிரம்பிய ஆலடி வல்வெட்டித்துறையை சேர்ந்த திருச்செல்வம் பிரான்சிஸ் ஜானதீபன் என்பவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதினம்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவின் பெயரிலேயே ஜானதீபம் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுமியை ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்து வைத்திய அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார் .
வல்வை கடலுக்கு அருகாமையில் விளையாடிக்கொண்டு இருந்த குறித்த 9 வயதுச் சிறுமையை அழைந்த ஜானதீபன். தான் ஒரு விளையாட்டுச் சொல்லி தருவதாக கூறி அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் அதனை மறைக்க சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து அனுப்பிவிட்டார். வீடு சென்ற சிறுமி தனக்கு வலிப்பதாக கூறியதை அடுத்தே விடையம் வெளியே வந்துள்ளது. சிறுமியின் தாயார் பொலிசில் செய்த முறைப்பாட்டை அடுத்து , பொலிசார் ஜானதீபனை கைதுசெய்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

No comments:

Post a Comment