Monday, July 20, 2015

இரண்டு நண்பிகளை பிரித்து அவர்களுக்கு அல்வா கொடுத்து கர்ப்பமாக்கிய இளைஞன் !


முல்லைத்தீவு மல்லாவியிலுள்ள வாலிபர் ஒருவர் நண்பிகளான இருவரை கர்ப்பந்தரிக்க வைத்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. நண்பிகள் இருவருக்கும் பரஸ்பரம் வாலிபரின் கைகங்கரியம் தெரியாமல் இருந்த நிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும், விடயம் தெரிய வந்ததையடுத்து இரண்டு யுவதிகளும் கிராமசேவகரின் ஊடாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.மல்லாவி நகரத்தில் இனிப்பு பொருட்கள் விற்கும் கடையொன்றை நடத்தும் வாலிபரே இரண்டு யுவதிகளிடமும் கைவரிசை காட்டியுள்ளார். இவர் யாழ் புறநகர் பகுதியை சேர்ந்தவர். தற்பொது மல்லாவியில் கடை நடத்தி வருகிறார்.
அவரது கடைக்கு அடிக்கடி பொருட்கள் வாங்க வந்த நண்பிகள் இருவரையும் வலையில் வீழ்த்தியுள்ளார். ஆரம்பத்தில் இரண்டு யுவதிகளும் வாலிபரின் கடைக்கு ஒன்றாகவே வந்து சென்றதாகவும், அவர்களுடன் தனித்தனியாக பேசி, இருவரையும் பிரித்துள்ளார்.இரண்டு நண்பிகளுடனும் மற்றவர் நடத்தை சரியற்றவர் என கூறி, ஒன்றாக திரிவதை தவிர்க்க சொல்லியுள்ளார். வாலிபரின் பேச்சை நம்பிய யுவதிகள் ஒன்றாக திரிவதை தவிர்த்துள்ளனர். அவரது திட்டம் பலித்து, யுவதிகள் தனித்தனியாக கடைக்கு வந்து வலையில் விழ ஆரம்பித்துள்ளனர்.
திருமணம் செய்வதாக கூறி இரண்டு யுவதிகளுடனும் வாலிபர் உல்லாசம் அனுபவித்துள்ளார்.இரண்டு யுவதிகளும் கர்ப்பவதிகளாகி, விடயம் வீடுகளில் வெளிச்சமான பின்னர்தான் தங்கள் இருவருக்கும் வாலிபர் அல்வா தந்தவிட்டதை புரிந்து கொண்டுள்ளனர்.இதனையடுத்து பிரதேச கிராமசேவகரிடம் விடயத்தை கூறியதையடுத்து, அவரூடாக மாங்குளம் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment