Friday, July 31, 2015

லண்டன் பொலிஸ் காருக்குள் மணந்த கஞ்சா: பொலிசார் செய்த லீலை மாட்டியது


லண்டனில் உள்ள மெற்றோ பொலிடன் பொலிஸ்காரர் ஒருவர் , தனது காரில் ஏறியபோது உள்ளே கஞ்சா மணப்பத்தை உணர்ந்துள்ளார். உடனே சென்று தனது காரை முன்னர் யார் ஓட்டினார்கள் என்ற விடையத்தை ரக்காட்டில் சோதித்துள்ளார். தான் காரை பொறுப்பில் எடுக்க முன்னர் , முதலில் காரை ஓட்டிய நபர் கஞ்சாவை காரில் ஊதித்தள்ளியுள்ளார் என்பதனை அவர் கண்டு பிடித்துள்ளார். போதையில் காரை ஓட்டித் திரிந்த அந்த பொலிஸ்காரரை தேடி அதிகாரிகள் விரைந்தார்கள். அவரை சோதனை செய்த வேளை அவரிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை அவரை மருத்துப் பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை , அவர் அதிக போதையில் வேலை நேரத்தில் இருந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த பொலிஸ்காரரை வேலையை விட்டு விலத்தியுள்ளார்கள் உயர் அதிகாரிகள். இது தேவையா ?

No comments:

Post a Comment