Saturday, July 25, 2015

கையைப் பிடித்து இழுத்து தொல்லை கொடுத்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பள்ளி மாணவிகள்

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில், தங்களது கைகளைப் பித்து இழுத்து தொல்லை கொடுத்த வாலிபரை அடித்து பள்ளி மாணவிகள் அடித்து, உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள தேளம்பாடி பகுதியில் உள்ள பள்ளியில், படித்துவரும் மாணவிகள் சிலர், பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அந்த மாணவிகளின் கைகளை பிடித்து இழுத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
வாலிபரின் இந்த செயலால் ஆத்திரமடைந்த மாணவிகள், அந்த வாலிபரை கீழே தள்ளி அடித்து உதைத்துள்ளனர். மேலும், அந்த வாலிபரை இங்கிருந்த கம்பால் அடித்துள்ளனர். இதனால், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இந்நிலையில், அப்பகுதி பொதுமக்ளின் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப்பிடத்த மாணவிகள், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர், அந்த வாலிபரை கைது செய்து செய்தனர்.

No comments:

Post a Comment