Wednesday, July 29, 2015

யாழில் காணாமல் போன இளைஞர் கொழும்பில் மீட்பு

யாழ்.நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல்போனதாக கூறப்பட்ட 19 வயது இளைஞர் கொழும்பு வெள்ளவத்தை பொலிஸாரினால் நேற்றய தினம் மீட்கப்பட்டுள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட்ட தம்பிமுத்து தம்பிராசா என்பவரின் மகன் கொழும்பிலிருந்து யாழ்.வந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல்போனதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் யாழ்.பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பொறுப்பதிகாரி வழங்கிய தகவல் அடிப்படையில் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் நேற்றய தினம் மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பல சந்தேகங்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment