Thursday, July 30, 2015

மருத்துவப்பீட மாணவியின் புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்ட காதலன் கைது

முன்னாள் காதலியான பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடத்தில் பயிலும் மாணவியின் புகைப்படத்தை விளம்பரமாக வடிவமைத்து இணையத்தளத்தில் வெளியிட்ட இறுதியாண்டு மாணவனை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் பயிலும் மருத்துவப் பீட இறுதியாண்டு மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பிரதேசத்தை சேர்ந்த இந்த மருத்துவப்பீட மாணவிக்கு ராஜரட்ட பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவனுக்கும் இடையில் 2013 ஆம் ஆண்டு காதல் சம்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மாணவனை விட்டு பிரிந்த மாணவிக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் பெற்றோர் சம்மதத்துடன் வேறு ஒரு இளைஞனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே கடும் கோபத்திற்கு மத்தியில் மாணவிக்கும் முன்னாள் காதலனுக்கும் இடையில் அனுராபுரத்தில் சந்திப்பொன்று நடந்துள்ளது.
அனுராதபுரத்தில் மீண்டும் தன்னை சந்தித்த தனது பல்கலைக்கழக காதலன் பலவந்தமாக தன்னுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு புகைப்படம் எடுத்ததாகவும் இந்த புகைப்படங்களை கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி அவரது பேஷ்புக் வலைத்தள கணக்கில் பகிரங்கப்படுத்தியுள்ளதாக மாணவி புலனாய்வுப் பிரிவின் கணனி குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் அவரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment