Sunday, July 19, 2015

அவுஸ்திரேலியாவில் அண்ணனை இழந்து தவிக்கும் தம்பியின் உருக்கமான வேண்டுகோள்!

அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள கிரேஸ்ரன் என்னும் நகரத்தில் வசித்து வந்த அஜந்தன் நவரட்ணம் என்ற இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை தொடர்பாக அவரின் தம்பி யசி நவரட்ணம் அங்கு வசிக்கும் தமிழ் மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
அவர் தெரிவித்துள்ளதாவது,
படுக்கை அறையை சூடாக்கி கொள்ளும் பொருட்டு இறைச்சி வாட்டும் [B,B,Q] என அழைக்கப்படும் இயந்திரத்தின் கரி வில்லைகள் [charcoal tablets] அறையினுள் வைத்து விட்டு உறங்கப் போன அவர் அடுத்த நாள் இறந்த நிலையில் காணப்பட்டார்.
கரியுடன் வெளியாகும் காபன் மொனொரைட் வாயு இவரது மரணத்துக்கு காரணமாக உள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு, கல்லாறு என்னும் இடத்தைச் சேர்ந்த அஜந்தன் இரண்டு சிறு பிள்ளைகளும் உள்ளனர். அவர்களை இவரின் இறுதி கிரியைகளுக்கு அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
தற்போது அஜந்தனின் உடல் மேலதிக மற்றும் திடீர் மரண அதிகாரிகளின் விசாரணைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி, சிரட்டை கரி, மற்றும் எரிவாயு சூடாக்கிகள், படுக்கை அறையையோ மற்றும் மூடிய மண்டபங்களையோ சூடாக்குவதற்கு உகந்தவை அல்ல புதிதாக வந்தவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை அறிவிப்பாக கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
காபன் மொனொரைட் வாயு உயிரை கொல்வது என்பதுடன் மனமோ, நிறமோ, சுவையோ இல்லாத ஒரு வாயு என்பதால் தூக்கத்திலும் கூட மரணம் நிகழும் நிலைமை இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது அவுஸ்திரேலியாவில் கடுமையான குளிர் காலநிலை நிலவுவதனால் புதிதாக வந்தவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தனது தனயனின் பயணம் இறுதிப் பயணமாக அமையவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அகால மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்த அகதி செயற்பாட்டாளர் ஒருவர் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment