Wednesday, July 29, 2015

நடுவானில் ஆபாச பட நடிகையுடன் உல்லாசமாக இருந்த விமானி: வெடிக்கும் சர்ச்சை

விமானத்தின் காக்பிட் அறைக்குள் ஆபாச பட நடிகையுடன் இணைந்து விமானி ஒருவர் மது அருந்தி உற்சாகத்தில் திளைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் ஏர்வேசுக்கு சொந்தமான விமானம் ஒன்று 300 பயணிகளுடன் பிரித்தானியாவில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க் புறப்பட்டுச் சென்றது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் பயணம் செய்த ஆபாச படங்களில் நடித்துவரும் சோலே கான் என்ற நடிகை தமது தோழியுடன் விமானியின் அறைக்குள் நுழைந்துள்ளார்.
அங்கு அவர்கள் விமானியுடன் மது அருந்தியும், புகைபிடித்தும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்தச்சம்பவம் குறித்த தகவல் வெளியே கசிந்ததும் உரிய விசாரணை நடத்தப்படும் என குவைத் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
மலேசிய விமானம் மாயம், ஆல்ப்ஸ் மலையில் விமானம் விழுந்து நொறுங்கியது என பல்வேறு அச்சுறுத்தும் நிகழ்வுகளுக்கு விமானிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகளே காரணம் என சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் விமானிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில விமானிகள் விதிகளை மீறி செயல்படுகின்றனர்.
கடந்த 2001-ம் ஆண்டு செப்தம்பர் மாதம் நிகழ்ந்த இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பிறகு காக்பிட்டுக்குள் விமானிகளைத் தவிர எவரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று கடந்த 2007-ம் ஆண்டு முதல் விமானியின் அறைக்குள் புகைப்பிடிக்கவும் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment