Thursday, July 30, 2015

ஐ.எஸ் தீவிரவாதிகள் தலையில் மிளகாய் அரைத்த பெண் இவர் தான்: காமா ஆசையை !


ஐ.எஸ் தீவிரவாதிகள் என்றாலே எல்லோருக்கும் நடுக்கம் வரும். அமெரிக்கா முதற்கொண்டு அனைத்து வல்லரசு நாடுகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ஒரு ரஷ்ய பெண் விரலை விட்டு ஆட்டியுள்ளார் என்றால் நம்புவீர்களா ? ஆம் நடந்துள்ளது. ரஷ்யாவில் இருக்கும் பெண் ஒருவர் பேஸ் புக் ஊடாக ஒரு போலியான , கணக்கை திறந்துள்ளார். அங்கே தனது அழகான படங்களை போட்டு , தன்னை ஒரு முஸ்லீம் பெண்ணாக அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மனைவியாக இருப்பதே பெரும் என்று இவர் அடிக்கடி எழுதி வந்துள்ளார். சிரியா போன்ற நாடுகளில் உள்ள இளைஞர்களோடு இவர் பேஸ் புக் ஊடாக உறவாட ஆரம்பித்துள்ளார்.
இறுதியில் ஒரு ஐ.எஸ் தீவிரவாதி இவரை தொடர்புகொண்டு , தன்னோடு வந்து மனைவியாக இருக்க ஆசையா என்று கேட்டுள்ளார். ஆம் இது நான் செய்த பாக்கியம். ஆனால் என்னிடம் சிரியா வர பணம் இல்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் இந்தப் பெண். இதனை நம்பிய தீவிரவாதிகள் , இவர் சிரியாவுக்கு வர பணத்தை அனுப்பியுள்ளார்கள். பணத்தைப் பெற்றுக்கொண்ட இப் பெண் இறுதியில் ஆட்டையைப் போட்டுள்ளார். அழகையும் , கொஞ்சம் காமத்தையும் கலந்தால் உலகில் எதனை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்கிறார் இந்தப் பெண்.

No comments:

Post a Comment