Thursday, July 23, 2015

அழுது புலம்பும் அல்வாய் வாலிபர்! இது தேவையா?

பேஸ்புக்கில் அறிமுகமாகி, பின்னர் நிர்வாணப்படங்களை அனுப்பி தனது வலையில் வீழ்த்தி என்னிடமிருந்து பெருந்தொகைப்பணத்தை யுவதியொருவர் வறுகிவிட்டார்.

அவரிடமிருந்து இந்த பணத்தை வாங்கித் தந்து எனக்கு நியாயம் கிடைக்கச் செய்யுங்கள் இப்படி கண்ணீரும் கம்பலையுமாக பருத்தித்துறை பொலிஸ்நிலையத்தில் முறையிட்டுள்ளார். இந்த விபரீத சம்பவம் கடந்த திங்கள்கிழமை நடந்துள்ளது.
வடமராட்சி அல்வாயை சேர்ந்த 25 வயதான வாலிபரிற்கு பேஸ்புக்கில் பருத்தித்துறை யுவதியொருவர் சினேகமானார்.
அவருக்கு 28 வயது. அறிமுகமான சில நாளிலேயே தான் திருமணமானவர் என்றும், கணவர் வெளிநாட்டில் என்றும் கூறி, மிக விரகதாபம் கொப்பளிக்க பேசியுள்ளார்.
பேஸ்புக்கில் சற் செய்து முடிய, பின்னர் இருவரும் தொலைபேசியில் பேசத் தொடங்கினர்.
யுவதியின் விரகதாபத்தை பேச்சின் மூலம் வாலிபரும் தீர்த்து வந்துள்ளார்.
சிறிதுநாளிலேயே இருவரும் வைபரிற்கு நுழைந்து, படங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இருவரும் அங்கு அந்தரங்கப்படங்களை பரிமாறி, சில்மிசப் பேச்சுக்கள் பேசி, உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த நெருக்கம் அதிகரித்து, இருவரும் ஒன்றாக சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.  வாலிபர் கொண்டிருந்த மயக்கத்தை பயன்படுத்தி யுவதி பொருட்கள் வறுகுவதிலேயே குறியாக இருந்துள்ளார். பெருமளவு பணம் மற்றும் நகைகளை வாலிபரிடமிருந்து யுவதி கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியுள்ளார்.
அண்மையில் யுவதியின் வீட்டிற்கு வாலிபர் சென்றிருக்கிறார். அங்கு அவர் கண்டகாட்சி பேரதிர்ச்சி தருவதாக அமைந்திருக்கிறது. அங்கு யுவதி இன்னொருவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்.
இதனையடுத்து யுவதியுடன் அந்த வாலிபர் முரண்பட்டுள்ளார். பின்னர் பருத்தித்துறை பொலிசாரிடம் சென்று முறையிட்டுள்ளார்.
சிலரது விருப்பத்திற்கிணங்க இருவரது பெயர் விபரங்களை வெளியிடாதிருக்கின்றோம்.

No comments:

Post a Comment