Tuesday, July 21, 2015

பரபரப்பை ஏற்படுத்திய அம்பலங்கொடை மாணவி வல்லுறவு.

15 வயதான பெண் பிள்ளையொன்றே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்துள்ளதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமைக்கான காரணமும் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவி, தனது காதலனின் சகோதரியை மோசமாக திட்டியுள்ளார்.
இதற்காக பழிவாங்க நினைத்த அப் பெண் , குறித்த மாணவியின் வீட்டுக்கு வந்து அவரது காதலன் , அதாவது பெண்ணின் சகோதரன் விஷம் குடித்துவிட்டதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அவரை தனது வீட்டுக்கு கொண்டு சென்று வீட்டைப் பூட்டி , அதன் சாவியை சந்தேகநபர்களுக்கு வழங்கியுள்ளார்.
அவர்கள் அம் மாணவியை தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனது கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment