Monday, July 20, 2015

நாவற்குழி அம்மனின் திருவிளையாடல்: இளைஞர்களை மயக்கி என்ன நடக்கிறது தெரியுமா ?

யாழில் இளைஞர் மது போதைக்கு அடிமையாகி , கஞ்சாவையும் அடித்துவிட்டு கொலை, கொள்ளை கற்பழிப்பு தான் செய்கிறார்கள் என்று நினைத்தால் இது சற்று வித்தியாசமாக உள்ளது. யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் செய்வினை, வசியம் போன்றவை செய்வதில் கில்லாடியான 35 வயதான திருமணமான பெண் ஒருவர் செய்யும் செயல் பல குடும்பங்களைப் பிரித்து வைத்தும் சில இளைஞர்களை விசர் பிடிக்கவும் செய்துள்ளது. அட விசர் என்றால் அந்த விசர் அல்ல. இது வேற விசர். குறித்த பெண் "ஊத்தைக் காளி" எனப்படும் தெய்வத்தின் மூலம் பல செய்வினைகளையும் முகவசியங்களையும் செய்துவருவதாக அப்பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். இதற்காக துார இடங்களில் இருந்து 20 வயது தொடங்கி 35 வயது வரையான இளைஞர்கள் அங்கு வந்து போகின்றார்களாம்.
ஊத்தைக் காளிக்கு காணிக்கையாக வெளிநாட்டுச் சாராயம் மற்றும் ஊர்ச் சேவல் போன்றவைகளும் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையான காசும் கொடுத்தே செய்வினை, முகவசியம் போன்றன செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஒரு பெண்ணை வசிகப்படுத்தவேண்டும், அவளை என் காலடியில் விளவைக்கவேண்டும் என்று கூறி இளைஞர்கள் பலர் இப்பெண்ணிடம் வந்து காசைக் கொடுத்து வசிக மருந்தை வாங்கிச் செல்கிறார்கள். இரவில் காளிக்கு கொடுக்கப்பட்ட வெளிநாட்டு சாராயத்தை அடிப்பதும் ,மற்றும் ஊர் சேவலை அடித்து கறி சமைத்து உண்பதும் இவர் வழக்கம்.
போதாக்குறைக்கு இளைஞர்கள் சிலரை , தன்னோடு இரவில் தங்கினால் மாத்திரமே சில வசிக மற்றும் மாந்திரீகம் வேலைசெய்யும் என்று கூறி குறித்த பெண் தங்கவைக்கிறார். பின்னர் இரவில் அவர்களோடு உடலுறவில் ஈடுபடுகிறார். இதுபோல நேற்று முன் தினம் அவர் வீட்டுக்கு அருகாமையில் , ஒரு இளைஞர் காலைப் பொழுதில் நிலத்தில் விழுந்து கிடந்துள்ளான். அவனை தட்டி எழுப்பிய அயலவர்களுக்கு ஒரு விடையம் லேட்டாக தான் புரிந்ததாம். அவன் கஞ்சாவில் தான் சுருண்டு விழுந்தான் என்று. குறித்த பெண் இரவில் போடும் லூட்டியை பார்த்து அவரது கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment