கல்காரி நகரில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற இந்த தாக்குதலில் ஸ்டீவன் ஷார்தா என்ற அந்த வாலிபருடன் இன்னொரு நபரும் துப்பாக்கியால் சுடப்பட்டு காருக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஸ்டீவன் ஷார்தாவின் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரைப் பற்றிய அடையாளம் தெரியாமல் போலீசார் திணறி வந்ததால் இந்த செய்தி கடந்த 14-ம் தேதிதான் வெளியானது.
இந்த படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து துப்பு துலக்கி வருகின்றனர். இது திட்டமிட்ட கூலிப்படை தாக்குதலாக இருக்கலாம் என கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment