Sunday, July 19, 2015

16 சிறுமிகளை பலாத்காரம் செய்துக் கொன்ற வாலிபர்: பரபரப்பு வாக்குமூலம்

டெல்லியில் வாலிபர் ஒருவர் 16 சிறுமிகளை பலாத்காரம் செய்துக் கொன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த விவகாரத்தில் வாலிபர் ரவிந்தர் குமார் (24) கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான விசாரணையில், வாக்குமூலம் அளித்துள்ள ரவிந்தர் குமார், கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து மேலும் 15 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒத்துக்கொண்டுள்ளான்.
ரவிந்தர் குமார் கூறுகையில், சிறுமிகளுக்கு சொக்லேட் மற்றும் பணம் தருவதாக கூறி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து கழுத்த நெரித்து கொலை செய்தேன்.
கொலை செய்த பின்னர் சிறுமிகளின் உடலை கழிவுநீரில் வீசிவிடுவேன் அல்லது மண்ணில் புதைத்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளான்.
இதுவரையில் 6 கொலைகளில் குமாருக்கு தொடர்பு உள்ளதை பொலிசார் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
ஏற்கனவே பெகும்பூர் பகுதியில் சிறுவனை கொடூரமாக தாக்கிய விவகாரம் தொடர்பாக குமார் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
இதே வருடத்தில் 3 வயது சிறுமியிடம் அவன் தவறாக நடந்துக் கொண்டு உள்ளான் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நொய்டா மற்றும் அலிகார்க் பகுதிகளில் ரவிந்தர் குமார் ஓட்டுனராக பணியாற்றியதாகவும், பதான் மாவட்டத்தில் இதேபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment