Tuesday, July 28, 2015

ஸ்கூலுக்கு காரில் இறக்கச் சென்று: 12 வயது மாணவனோடு உடல் உறவுகொண்டு தாயான பெண் !


12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனை மயக்கி, பாலுறவுக்கு பயன்படுத்தி, அவன் மூலம் கருத்தரித்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அவுஸ்திரேலியப் பெண் ஒருவருக்கு 06 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது மகளுடன் ஒன்றாக பாடசாலையில் படிக்கும் சிறுவன் ஒருவனுடன் ஏற்படுத்திக் கொண்ட தகாத உறவின் மூலமே குறித்த பெண் கருத்தரித்து குழந்தை பெற்றெடுத்துள்ளார். 36 வயதாகும் அந்தப் பெண், தனது மகளை காரில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்போது, மகளின் சகவகுப்பு மாணவன் என்ற முறையில் மேற்படி சிறுவனையும் அவ்வப்போது ஏற்றிச் செல்வது வழக்கம்.
கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் பழக்கத்தை அந்த சிறுவன் பன்னிரெண்டு வயதை அடைந்தபோது தனது இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்திக் கொண்டுள்ளார் அந்தப் பெண். இதையடுத்து, பல சந்தர்ப்பங்களில் ஆணுறைகளை பயன்படுத்தாமல் அந்த சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்டுவந்த அந்தப் பெண் கர்ப்பிணியாகி கடந்த மே மாதம் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். இச்சம்பவம் பற்றி அறிந்த சிறுவனின் குடும்பத்தார், தங்கள் மகனின் குழந்தைப் பருவத்தையும், குடும்ப ஒற்றுமையையும் அந்தப் பெண் சீர்குலைத்து விட்டதாக பொலிசில் முறைப்பாடு அளித்ததுடன் நீதிமன்றத்தில் அந்தப் பெண் மீது வழக்கும் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜேன் பாட்ரிக், ‘தனது சொந்த மகன் போல் குறித்த சிறுவன் மீது அக்கறை செலுத்துவதை விடுத்து, தன்னுடைய உடல் சுகத்துக்காக தகாத முறையில் அந்தப் பச்சிளம் சிறுவனை பயன்படுத்திக் கொண்டு, இத்தனை சிறிய வயதில் அவனை தந்தையாக்கி, அவனுக்கு தேவையற்ற மன உளைச்சலை அளித்ததற்காக குற்றவாளிக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கிறேன்’ என்று உத்தரவிட்டார். தற்போது அந்த சிறுவனுக்கு 14 வயது ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment