பண்டத்தரிப்பை சேர்ந்த காமுகன் ஒருவனால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட சண்டிலிப்பாய் மத்தியை சேர்ந்த 31 வயதான யுவதி ஒருவர் கடந்த இரு மாதத்திற்கு முன்னிருந்து 2 தடவைகள் நஞ்சு அருந்திய நிலையில் இன்று உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். யாழ்.போதனா வைத்தியசாலை இனிமேலும் சிகிச்சை அளிக்க முடியாது என்று கைவிரித்து விட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
யுவதி தற்போது வீட்டில் உணர்வு அற்ற நிலையில் இருப்பதாக தெரியவருகிறது. யுவதி நஞ்சு அருந்துவதர்கு முன் இந்த விடயத்தை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தார். குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளமையால் அவர்களாலும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தெரியவருகின்றது.
http://www.eelakural.com/?p=17139
No comments:
Post a Comment