Saturday, June 27, 2015

வளர்ப்பு மகளை தந்தை திருமணம் செய்து கொள்ளலாம்; ஈரானில் புதிய சட்டம்


ஈரானில் குழந்தைகள் திருமணம் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்களை பாதுகாப்பதற்காக புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் தத்தெடுத்து வளர்க்கும் மகளை வளர்ப்பு தந்தையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பிரிவும் உள்ளது.
ஆனால் அந்த பெண் அவரை விட 13 வயது குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதற்கு ஆதரவாக எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
எனவே அந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும் ஈரானில் பாதுகாவலர் கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்கவுன்சிலில் மத குருக்கள் நீதிபதிகள் உள்ளனர். அவர்கள் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பார்கள். ஈரானில் கடந்த 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10 முதல் 14 வயதுக்குட்பட்ட 42 ஆயிரம் குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment