Monday, June 22, 2015

ஐ.எஸ் கொடுக்கும் பயிற்சியைப் பார்த்து அமெரிக்கா நடுங்கியுள்ளது !

ஐ.எஸ் தீவிரவாதிகளைப் பற்றி நாம் சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. தற்போது உலகில் உள்ள அதி பயங்கர முஸ்லீம் தீவிரவாதிகள் இவர்கள் தான். பல தீவிரவாத இயக்கங்களை அமெரிக்கா முன்னர் அடக்கியுள்ளது. சிலவற்றை அடியோடு அழித்தும் உள்ளது. ஆனால் அவர்களே கண்டு அதிர்ந்து போயுள்ள அமைப்பு தான் இந்த ஐ.எஸ் தீவிரவாதிகள். இவர்கள் இளைஞர்களை தம்வசம் இழுத்து , அவர்களுக்கு கடுமையான பயிற்ச்சிகள் பலவற்றை கொடுத்து தயார் செய்து வருகிறார்கள். இவர்களை 4ம் தலைமுறை போராளிகள் என்று அவர்கள் பெயர் சூட்டி அழைக்கிறார்கள். அவர்கள் இந்த பூமியில் பிறந்ததே கொலைசெய்வதற்காக தான் என்று அவர்களுக்கு தினம் தினம் பாடம் நடத்துகிறார்கள்.

இது போதாது என்று ஸ்பெஷல் பயிற்சிகளையும் அவர்கள் கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் இதுபோன்று இளைஞர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடுக்கும் பயிற்ச்சி ஒன்றின் வீடியோ வெளியாகியுள்ளது. இது பல நாடுகளை அதிர்சியில் உறையவைத்துள்ளது என்கிறார்கள். கடுமையான பயிற்ச்சிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் இளைய போராளிகளுக்கு வழங்கி வருவது அதில் தெளிவாகத் தெரிகிறது.








No comments:

Post a Comment