காரைநகர் தந்த இசைக்கலைஞர் இராகசுரபி செல்வி. பரமேஸ்வரி கணேசன் ரொரன்ரோ வந்தடைந்தார்
யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளரும் ஈழத்தமிழ் இசையுலகின் பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞரும் எமது காரை மண்ணின் மகளுமாகிய இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை(23.06.2015) அன்று இரவு ரொரன்ரோ வந்தடைந்தார்.
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவியான செல்வி பரமேஸ்வரி பாடசாலையின் மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் யூன் மாதம் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிகழ்வில் கலந்துகொண்டு இசைக்கச்சேரி நிகழ்த்துவதற்காகவே இங்கு வருகை தந்துள்ளார்.
காரை மண்ணிற்கு பெருமை சேர்த்த நாதஸ்வரக் கலைஞர் அமரர் காரையம்பதி N.மு.கணேசனின் புதல்வியான செல்வி பரமேஸ்வரி நிகழ்த்தவிருக்கம் இன்னிசைக் கச்சேரி கர்நாடக இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களை பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர் ரொரன்ரோ சர்வதேச விமான நிலையத்தில் மலர்ச்செண்டு கொடுத்து பொன்னாடை போர்த்து வரவேற்றனர். படங்களைக் கீழே காணலாம்.
யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளரும் ஈழத்தமிழ் இசையுலகின் பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞரும் எமது காரை மண்ணின் மகளுமாகிய இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை(23.06.2015) அன்று இரவு ரொரன்ரோ வந்தடைந்தார்.
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவியான செல்வி பரமேஸ்வரி பாடசாலையின் மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் யூன் மாதம் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிகழ்வில் கலந்துகொண்டு இசைக்கச்சேரி நிகழ்த்துவதற்காகவே இங்கு வருகை தந்துள்ளார்.
காரை மண்ணிற்கு பெருமை சேர்த்த நாதஸ்வரக் கலைஞர் அமரர் காரையம்பதி N.மு.கணேசனின் புதல்வியான செல்வி பரமேஸ்வரி நிகழ்த்தவிருக்கம் இன்னிசைக் கச்சேரி கர்நாடக இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களை பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர் ரொரன்ரோ சர்வதேச விமான நிலையத்தில் மலர்ச்செண்டு கொடுத்து பொன்னாடை போர்த்து வரவேற்றனர். படங்களைக் கீழே காணலாம்.
No comments:
Post a Comment