Monday, June 22, 2015

செந்திலால் தான் சங்கர் சிகரம் தொட்டாராம் -ருசீகர தகவல்!



நடிகர் செந்தில்தான் இயக்குநர் ஷங்கரை சினிமாவில் உதவி இயக்குநராக சேர்த்து விட்டவர் என்கிற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.ஒருகாலத்தில் இயக்குநர் ஷங்கர் சினிமாவில் உதவி இயக்குநராகச் சேரமுடியாமல் சிரமப்பட்டுக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது ஜெயக்குமார் என்பவர் டாக்குமெண்ட்ரி படங்கள் எடுத்து வந்திருக்கிறார். அந்த ஜெயக்குமார் இயக்குநர்சிறுத்தை சிவா, நடிகர் பாலா ஆகியோரின் தந்தை. அப்போது அவரிடம் சேர்ந்து ஷங்கர் வேலை பார்த்து வந்திருக்கிறார். 
அந்த டாக்குமெண்ட்ரி படத்தில் நடிகர் செந்தில் நடிக்கப் போயிருக்கிறார். அவரிடம் தன்னை சினிமாவில் உதவி இயக்குநராக சேர்த்து விடும்படி கேட்டிருக்கிறார். அப்போது செந்தில் எஸ்.ஏ.சந்திர சேகரன் படத்தில் நடித்து கொண்டிருந்தாராம். அவரிடம் ஷங்கர் பற்றி செந்தில் சொல்லியிருக்கிறார். ஒரு பையன் இருக்கிறான் வாய்ப்பு கேட்கிறான் சேர்த்துக் கொள்வீர்களா என்று கேட்க, அவரோ,நீங்கள் நடிக்கும் காமெடி காட்சிகளுக்கு அவனுக்கு வசனம் எழுதத் தெரியுமா? அப்படி எழுதத் தெரிந்தால் அழைத்து வாங்க சேர்த்துக் கொள்கிறேன் என்றிருக்கிறார். அப்படி செந்தில் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் சேர்ந்தவர்தான் ஷங்கர்.
மனிதனுக்கு அதிர்ஷ்டம் வாய்ப்பு யார் மூலம் வருமென்று தெரியாது. யார் எப்படி வருவார் என்றும் சொல்ல முடியாது. அதிர்ஷ்ட தேவதை யார் மூலம் வேண்டுமானாலும் வருவாள் பயன்படுத்திக் கொள்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். என் உதவியாளர் தயாரித்துள்ள இந்த சீனி படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார். பேசி முடித்தவரிடம் ஓரங்கட்டி இதை ஷங்கர் இன்று நினைவில் வைத்து இருக்கிறாரா என்று கேட்ட போது" தெரியவில்லை. நான் அதை எல்லாம் எதிர்பார்ப்பதில்லை. இதை நியாயமாக நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும் " என்றார் அப்பாவியாக.
http://www.tamilan24.com/contents/?i=14648

No comments:

Post a Comment