Saturday, June 20, 2015

நான்கு மாணவிகள் துஷ்பிரயோகம்; ஆசிரியர் அதிரடியாக கைதானார் !


லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொராயா பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 10 மற்றும் 11 வயதுக்குட்பட்ட 4 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஆசிரியர் ஒருவரை லிந்துலை பொலிஸார் நேற்று (19) மாலை கைதுசெய்துள்ளனர். குறித்த மாணவிகள் நால்வரையும் பரிசோதனைகளுக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபரை நுவரெலியா நீதவான் முன்னிலையில் இன்று (20) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை, குறித்த சந்தேக நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் பொலிஸாரிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment