Monday, June 29, 2015

இத்தாலி ஆற்றில் வீழ்ந்த சிறுமி! காப்பாற்றிய இலங்கையர் ஆபத்தான நிலையில்!

இத்தாலியில் ஆற்றில் வீழ்ந்த சிறுமியை காப்பாற்ற சென்ற இலங்கையர் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ரிவோல்டா ப ஆட்டா என்ற ஆற்றில் வீழ்ந்த சிறுமி ஒருவரை காப்பாற்ற ஆற்றில் பாய்ந்த இலங்கையர் அவரை காப்பாற்றினார். இதன்போது அருகில் இருந்து ஏனையவர்களும் மனித சங்கிலியாக உதவி சிறுமியை காப்பாற்றி விட்டனர்.
எனினும் ஏனையவர்களை சிறுமியை மனித சங்கிலியாக நின்று காப்பாற்றியபோது சிறுமியை காப்பாற்றிய இலங்கையரின் கை ஏனையவர்களின் பிடியில் இருந்து நழுவிப்போனது.
இதனையடுத்து, ஹெலிகொப்டர் மூலம் இலங்கையர் மீட்கப்பட்டு தற்போது ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment