Sunday, June 28, 2015

கிளிநொச்சி எள்ளுக்காடு சிறுமி காணாமல் போதலுக்கும் மாற்றுத் தந்தைக்கும் தொடர்பு!

கிளிநொச்சி எள்ளுக்காடு சிறுமி காணாமல் போதலுக்கும் மாற்றுத் தந்தைக்கும் தொடர்பு:

உதயகுமார் யர்சிகாவின் வீடு

கிளிநொச்சி உருத்திரபுரம் எல்லுக்காடு கிராமத்தில் சிறுமி உதயகுமார் யர்சிகா காணாமல் போய் இன்றுடன் ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னமும் குழந்தை கண்டுபிடிக்கப்படவில்லை. என்பதுடன் சிறுமி தொடர்பில் தொடர்ந்தும் மர்மமே நீடிக்கிறது.

இதேவேளை சிறுமியின் கடத்தலுக்கு மாற்றுத் தந்தையே காரணம் என்று  சிறுமியின் தயாரின் உறவினர்கள் கூறுவதாக இன்றைய தினம் எள்ளுக்காடு கிராமத்திற்குச் சென்ற குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

சிறுமி காணாமல் போன சந்தர்ப்பத்தில் மாற்றுத் தந்தை நடந்து கொண்ட விதம் உறவினர்கள் மத்தியில் இவ்வாறான ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை சிறுமி காணாமல் போன சந்தர்பத்தில் மாற்றுத் தந்தையுடன் புதிய நபர் ஒருவர் வீட்டுக்கு வந்ததாகவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிறுமி யர்சிகாவின் தந்தை குடும்பத்தை கைவிட்டுச் சென்ற நிலையில் மாற்றுத் திருமணம் ஒன்றை யர்சிகாவின் தாயார் செய்துள்ளார். தற்போது மாற்றுத் தந்தையும் காவல்துறை வசம் விசாரணையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதேவேளை யர்சிகா காணாமால் போன அன்று வீட்டிற்கு வந்த புதிய நபர் யாரென்று தெரியாது என்றும் அவரை அதன் பின்னர் காணவில்லை என்றும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் தாயார் சிறுமியை விற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டிருந்தது. ஆனால் அதை முற்றாக உறவினர்கள் மறுக்கின்றனர்.

சிறுமியை தேடும் நடவடிக்கை கிராமத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கிராம வாசிகள் குறிப்பிடுகின்றனர்.

தொடர்ந்தும் சிறுமியின் தாயார் உள்ளிட்ட ஏழுபேர் கிளிநொச்சி காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர்.

இதேவேளை சிறுமியை காட்டேரி என்ற அமானுச சக்தி காட்டுக்குள் அழைத்துச் சென்றதாகவும் கிராம வாசிகளில் கூறிக்கொண்டிருப்பதையும் குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121405/language/ta-IN/----.aspx

No comments:

Post a Comment