Wednesday, June 24, 2015

புலம்பெயர் தமிழரை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது: சிங்கள காடையர்கள் மீண்டும் ஆரவாரம் !


பெரும் கஷ்டத்தின் மத்தியில் பெறப்பட்ட வெற்றியை பாதிக்கும் வகையில் நாட்டை மீண்டும் இழக்க முடியாது என தெரிவித்துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமால்ப்பே சோபித்த தேரர் புலம் பெயர் தமிழர்களை நாட்டுக்குள் அடி எடுத்து வைக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய சக்திகள் என்ற வகையில் தாம் புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்குள் அனுமதிக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
புலம்பயர் தமிழர்களை அழைத்து மங்கள சமரவீர விருந்து வைக்கவும் விழா எடுக்கவும் முயல்வதாகவும் அவர் தனது உறவினர்களுக்காக இவ்வாறு செயற்படுகிறார் என்பது குறித்து தாம் அறிந்துள்ளதை மங்கள சமரவீர அறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment