Sunday, June 28, 2015

அண்மையில் தற்கொலை செய்து கொண்ட பளை கரந்தாயை சேர்ந்த பானுசா சிவப்பிரகாசம் என்ற மாணவி தொடர்பில் ...


7 hrs ·
ஊடகங்களால் தவறாக சித்திரிக்கப்பட்ட அன்பு நண்பனின் ஒரு சிறு தகவல்கள்
அண்மையில் தற்கொலை செய்து கொண்ட பளை கரந்தாயை சேர்ந்த பானுசா சிவப்பிரகாசம் என்ற மாணவி
தொடர்பில் தங்கள் ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பில்..
உண்மையாகவும் உயிராகவும் ஒரு பெண்ணை வாழ்க்கை என நினைத்து காதலித்து அவளை பறி கொடுத்த
வலி வேதனை ஒருபுறம் இருக்க உண்மை நிலையறியாத தங்களின் செய்தி அறிக்கையிடல்கள் மேலும் வேதனையளிக்கின்றன.
உயிர் நீத்தவளை பற்றி எதுவும் தெரிவிப்பது அழகில்லை என்பதற்காகவும் அவளை பறிகொடுத்த வேதனையுமே இதுவரையில் எதையும் வெளியிடாமைக்கு
காரணமே தவிர வேறில்லை
இருந்தும் தங்களின் அறிக்கையிடல்களை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் சில விடயங்களை வெளிப்படுத்திக்கொள்கிறேன்.
பானுசா என்ற பெண் பல்கலைக்கழக மாணவியாவதற்கு முன்னரே எனக்கு பழக்கமானவர். தன்னைப்பற்றிய சில விபரங்களை அவர் எனக்கு ஆரம்பத்திலேயே
தெரிவித்திருந்தார். தான் யுத்த காலத்தில் ஒரு கண் பாதிப்புக்குள்ளானமை தொடர்பிலும் ஏற்கனவே ஒருவரை காதலித்திருந்த நிலையில் அவரால் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும்
தெரிவித்திருந்தார்.
தொடர்ச்சியாக இருந்து வந்த அவளுடனான பழக்கம் நாளடைவில் இருவருக்குள்ளும் காதலாக உருவாகியது.
பின்;னர் பானுசாவிற்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. காதலி பல்கலைக்கழகம் செல்லப்போகிறாள் என மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து
என்னாலான ஒத்தாசைகளையும் வழங்கியிருந்தேன்
பல்கலைக்கழகம் சென்ற பின்னர் அங்கிருந்த புதிய சூழல்கள் அவள் மனதில் மாற்றத்தை ஏற்பபடுத்தியிருந்தது
அதனால் அவ்வப்போது முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தாலும் இருவரும் உயிருக்குயிராக காதலித்து வந்தோம்.
அதன் பின்னர் வெளிநாட்டிலுள்ள உறவினரான இளைஞன் ஒருவருடன் அனேகமான நேரங்களில் ஸ்கைப்பில் தொடர்பு இருப்பது தெரிந்தநேரத்தில் அவளை கண்டித்ததை தொடர்ந்து
அவனுடனான ஸ்கைப் உரையாடல்களை தவிர்த்திருந்தாள். அதன் பின்னர் அவளுடன் முன்;னர் ஸ்கைப்பில் உரையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை குறித்த இளைஞன் அவளின் ஸ்கைப்
முகவரிக்கு அனுப்பியதை தொடர்ந்து அவனுடன் தொடர்பினை நீக்கியிருந்தாள்.
அதன் பின்னர் அவளின் ஊரை சேர்ந்த இளைஞன் ஒருவன் அவளின் முகப்புத்தகத்தில் தொடர்பினை ஏற்படுத்தி அவள் தன்னை காதலித்ததாகவும்
பின்னர் ஏமாற்றியமை தொடர்பிலும் நியாயம் கேட்டிருந்தான். இவ்விடயம் தொடர்பில் அவளிடம் கேகட்டபோது அவனுடன் பேச்சளவிலேயே தொடர்பு
இருந்ததாகவும் அவனின் குணநலன் சரி இல்லாமையால் அவனிடம் இருந்து விலகி விட்டதாகவும் தெரிவித்திருந்தாள்.'
இதனால் எங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. சில நாட்களின் பின்னர் குறித்த இளைஞன் பானுசாவுடன் உணவகம் ஒன்றில் இருந்ததை உ
றுதிப்படுத்தக்கூடிய
புகைப்படத்தினை அனுப்பி இருந்தான், அந்த சந்தர்ப்பத்திலும் ஒருமுறை மட்டுமே அவனுடன் வெளியில் கடை ஒன்றுக்கு சென்றதாகவும்
தெரிவித்திருந்தாள்.
இவ்வாறான நிலையில் பிரச்சினைகள் ஏற்பட தொடங்கின. அவளுடன் முரண்பட்டு தொடர்பினை தவிர்த்து வந்த நேரத்தில் தொடர்ச்சியாக மன்னிப்பு
கேட்பதும் பேசாது விட்டால் வீட்டில் உள்ள மற்றையவர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்துவதும், இல்லாது போனால்
எனது வீட்டுக்கு முன்பு வந்து நின்று ஏதோ ஒரு வழியில் பிரச்சினைகளை சமரசப்படுத்தி வந்தாள்
அவள் மீது வைத்திருந்த அதிகப்படியான பாசம் அவளை பிரியும் மனநிலையினை ஏற்படுத்தவில்லை.
இந்த காலகட்டத்தில் அவளது வீட்டுக் காதல் தெரிய வந்தது. அவளின் பெற்றோருடனும் உரையாடியுள்ளேன். அவளின் சகோதரர்களில் ஒருவனான சிவகரன் என்பவனும்
கணனிகள் திருத்துதல் தொடர்பில் எனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தேன்.
முன்னர் ஸ்கைப் ஊடாக தொடர்பில் இருந்து நீக்கியிருந்த வெளிநாட்டில் உள்ள இளைஞன் அவளின் தொலைபேசியில் வைபர் வழியாக
அவளுடன் தொடர்பில் இருந்ததும் அவள் அதனை நீண்ட காலமாக எனக்கு தெரியாது மறைத்து வந்ததும் மீண்டும் எமக்குள்
பிரச்சினையை ஏற்படுத்தியது.
அதனை தாங்கிக்கொள்ள முடியாது அவளுடன் கடுமையாக முரண்பட்டுக்கொண்டேன். இந்த நேரத்;தில் பிரச்சினைகள் அவளின் வீட்டுக்கு தெரிய வந்ததோடு
எனது வீட்டுக்கும் தெரியப்படுத்தியிருந்தார்கள், அதன் பின்னர் அவளது சகோதரன் அவளின் பழைய சிம் இலக்கத்தினை மாற்றி புதிய சிம் இலக்கத்துடக்
அவளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியிருந்தான். இதனை தாங்கிக்கொள்ள முடியாது பேராதனை சென்று அவளுடன் சண்டையிட்டிருக்கிறேன் (ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல் நண்பரகளுடன்
செல்லவுமில்லை அவளின் தொலைபேசியை பறித்து வரும் அவசியமோ எனக்கு ஏற்படவில்லை- மனச்சாட்சிக்கு உண்மையாக செயற்படும்.
ஊடகவியலாளர்கள் அவளின் தொலைபேசியை பறறித்தமை தொடர்பிலோ, நண்பர்களுடன் சென்றமை தொடர்பிலோ உறுதிப்படுத்தவும்)
இவ்வாறான நிலைமையில் ஆத்திரமடைந்தது வீட்டில் சென்று நிற்கும் படி கூறியிருந்தேன் ஆனால் மனசார கூறவில்லை
இதனை சாதகமாக்கிய அவள் தனது வீட்டுக்கு சென்றிருந்தாள்.
அதன் பின்னர் அவளது கைத்தொலைபேசியினை அவளது சகோதரனான சிவகரன் என்பவன் வாங்கி வைத்துக்கொண்டான்.
அதன் பின்னர் நடைபெற்ற பிரச்சினைகள் தொடர்பிலும் அவளது சகோதரனான சிவகரனின் தொலைபேசிக்கு பலமுறை தொடர்பு கொண்டு எடுத்துக்கூறி மன்னிப்பு கேட்டும்
ஏளனமும் நையாண்டியும் மிரட்டலுமே அவனிடம் இருந்து பதிலாக கிடைத்தன
1) இந்த காலத்தில் ஒருத்தி எத்தனை பேரையும் காதலிக்கலாம் பிடித்திருந்ததால் திருமணம் செய்யலாம் பிடிக்காது விட்டால்
கழட்டி விட்டு போகலாம் பாதிக்கப்பட்டவர்கள் எதுவும் செய்ய முடியாது
2)100 வீதம் நம்பிக்கை வைத்து காதலித்தது உனது பிழை
3) பழம் என்பது இருந்தால் பறவைகள் தேடி வரத்தான் செய்யும்
அத்துடன் என்னை மிரட்டவும் ஆரம்பித்தான், இந்த சந்தர்ப்பத்திலும் உன்னால் இந்த பிரச்சினையை கையாள முடியாது போனால் பெற்றோருடன் அல்லது
அவளுடன் பிச்சினை தீர்க்க விடுமாறு அவனிடம் கேவலப்பட்டு மன்றாடிய நாட்களை அவனின் மனச்சாட்சி அறியும், எதற்கும் சந்தர்ப்பம் தரவில்லை
இந்த அவுஸ்திரேலயாலில் உள்ள மற்றொரு சகோதரனான சிவகாந் என்பவரிடமும் தொடர்பு கொண்டு பிரச்சினைகள் தொடர்பில்
தொரியப்படுத்தியிருந்தேன் ஆனால் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.
அவளின் பல்கலைக்கழக கல்வி என்னை காரணமாக்கி இல்லாது போகவேண்டாம், அவளிடம் பல்கலைக்கழகத்தில் எந்த வித தொடர்போ தொந்தரவோ என்னால் ஏற்படாது
என்பதை எவ்விதத்தில் என்றாலும் உறுதிப்படுத்தி தருகிறேன் அவளின் பல்கலைக்கழக காலம் முடிவடைய என்னன்றாலும் பேசிக்கொள்ளலாம் என
கூறியும் அந்த கல்நெஞ்சன் இரங்கவில்லை
தெற்கு வெளிநாட்டு திருமண ஒழுங்கு தான் காரணம் என்பதை பின்னர் தான் புரிந்து கொள்ள முடிந்தது
அதன் பின்னர் அவள் திருமணம் முடித்து வெளிநாடு செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக அறிந்து கொண்டதை தொடர்ந்து மீண்டும் அவளது சகோhரர்களை தொடர்புகொண்டு கேட்ட
போதும் காத்திரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை சிவகரன் என்பவனிடம் இருந்து மிரட்டலே பதிலாக கிடைத்தது.
இந்த நேரத்தில் வேறு வழியின்றி அவள் என்னைவிட்டு வேறொருவனை திருமணம் செய்வதை தடுபப்தற்காக அவளின் காதல் தொடர்புகள் பற்றியும்
அவளின் சகோதரன் தெரிவித்த பதில்கள் தொடர்பிலும் அவள் திருமணம் செய்யவுள்ளதாக கருதிய மைத்துனர்கள் சம்பந்தப்பட்ட
சிலருக்கு எழுத்துமூலம் மட்டுமே வேறுவழயின்றி தெரியப்படுத்திருந்தேன், ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பது.
போல் ஆபாசம் மேற்கொள்ளும் நிலை எனக்கு ஏற்படவில்லை.
பானுசாவின் முகப்புத்தகம் தொடர்பிலான சர்ச்சை
அவளுடன் பழகிய இடைப்பட்ட காலத்தில் புதிய முகப்புத்தக கணக்கு என்னால் தான் உருவாக்கி கொடுக்கப்பட்டது.
அவளின் தொலைபேசியை பறித்து முகப்புத்தகத்தை பயன்படுத்தும் அவசியம் ஏற்படவில்லை
இருவரும் முகப்புத்தகங்களை மாற்றி பயன்படுத்திக்கொள்வது வழக்கம்;.
அவள் தற்கொலை செய்த அன்று காலை எனக்கு தொடர்பை ஏற்படுத்தியிருந்தாள், அவளின் உரையாடல் தற்கொலை மனநிலையை எடுத்துக்காட்ட
உடனடியாக எனது சகோதரி மூலமாக அவளது சகோதரனான சிவகரன் என்பவனுக்கு தெரியப்படுத்தியிருந்தேன், அவன் தனது சகோதரியை பார்த்துக்கொள்ள தனக்கு தெரியும்
அவருக்கு அவளால் தொடர்பு எடுக்கப்பட்டால் தொலைபேசியின் சிம் அட்டைய கழற்றி எறிந்து விட்டு இருக்க சொல்லவும் என தெரிவிக்கப்பட்டதை.
அவனின் மனச்சாட்சி அறியும்
இந்த நிலையில் ஒருதலைக்காதல் உள்ளிட்ட ஊடக வியாபாரங்கள் வேதனையை தோற்றுவித்து நிற்கிறது.
தவிர்க்கமுடியாத நிலையிலேயே மேற்கூறப்பட்ட விடயங்களை வெளியிட வேண்டிய நிலை உண்மை நிலையறியாத சில ஊடகங்களால் ஏற்பட்டுள்ளது. அனேகமான விடயங்களை தவிர்த்துள்ளேன்.
ஊடகங்கள் உண்மை நிலையறிந்து தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முக்கியமாக நான் பணிபுரிந்ததை காரணம் காட்டி ஊடக நிறுவனம் மீதான தொழி;ல்சார் குரோதங்களை தவிர்க்கும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.













 http://www.eelakural.com/?p=16807



https://www.youtube.com/watch?v=sG9kihoxFF4

1 comment:

  1. முதலில ஒழுங்கா என்ன நடந்தது எண்டு விசாரிச்சுட்டு கிறுக்குங்கடா அந்தப்பொண்ணு யாரு அவனுக்கு எப்படி பழக்கம் எண்டு யாரயாவது விசாரிடா முதல்ல

    ReplyDelete