இணையத்தளங்களை பயன்படுத்தி பெண்களிற்கு தொல்லை கொடுக்கும் காமுகர்களின் தொல்லை நாளிற்கு நாள் அதிகரித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இப்படியான வாலிபன் ஒருவனால் பளையில் பல்கலைகழக மாணவியொருவர் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அண்மைய உதாரணமும் உள்ளது.
பெண்கள் இணையத்தளத்தை பயன்படுத்தும் போது அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். இணையத்தை பயன்படுத்தி பெண்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒரு காமுகர் கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. இப்படியான ஏமாற்றுப்பேர்வழிகள் தொடர்பில் நீங்களும், உங்கள் சுற்றத்தையும் விழிப்புடன் வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
இப்படி பெண்களை குறிவைத்து இயங்கிய ஒருவர் தகவல் வெளியாகியுள்ளது. சிங்கள யுவதியொருவர் துணிச்சலுடன் அவனைப்பற்றிய விபரங்களை பொலிசாரிடம் வழங்கியுள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசாரும் இறங்கியுள்ளனர்.
அந்த யுவதிக்கு அண்மையில் பேஸ்புக்கில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. தன்னை இணையத்தள ஹக்கர் என அறிமுகப்படுத்திய அந்த நபர், இணையத்தின் ஊடாக அந்த யுவதியின் நிர்வாணப்படங்கள் சிலவற்றை எடுத்து விட்டேன், உன்னுடைய தொலைபேசி இலக்கத்தை தராவிட்டால் அதனை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளான்.
எனினும், அவனது மிரட்டலிற்கு பணியாத யுவதி, எப்படி எனது படம் உன்னிடம் வந்தது? நான் அப்படியான பெண்ணல்லவே என பதிலளித்துள்ளர்.
எனினும் விடாக்கண்டனான வாலிபன், தொலைபேசி இலக்கத்தை தருகிறாயா அல்லது எனது வேலையை காட்டட்டுமா என மிரட்டியுள்ளான். அவனது பெயர் நுவான்.
எனினும் விடாக்கண்டனான வாலிபன், தொலைபேசி இலக்கத்தை தருகிறாயா அல்லது எனது வேலையை காட்டட்டுமா என மிரட்டியுள்ளான். அவனது பெயர் நுவான்.
No comments:
Post a Comment