Monday, June 22, 2015

30 மில்லியன் தந்தால் மலேசிய விமானத்தை சுட்டத்து எந்த நாடு என்று சொல்வேன் !

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த ஆண்டில் மட்டும் , தனது இரண்டு விமானங்களை இழந்தது. பல நூறு பயணிகளோடு விழுந்து காணமல் போன MH370 ஒரு புறம் இருக்க , குறுக்கு வழியில் சீக்கிரம் செல்லலாம் என்று உக்கிரைன் வழியாக பணித்த MH17 விமானம் ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை உக்கிரேனில் உள்ள ரஷ்ய ஆதரவுப் படைகள் செய்ததாக கூறப்படுகின்ற போதும் ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் கையில் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை வையுங்கள் , ஆதாரத்தோடு யார் சுட்டது என்று நான் சொல்கிறேன் என்று மர்ம நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இச்செய்தி ஊடகங்களில் பரவி பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.
விமானம் வானில் பறக்கும்வேளை , கீழே இருந்து ஏவுகணையை எந்த நாடு ஏவியது ? அதனை நான் எனது மோபைல் போனில் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறேன் என்று இன் நபர் சொல்லாமல் சொல்லியுள்ளார். குறித்த நபருக்கு யார் 30 மில்லியனை கொடுக்க முடியும் ? மலேசியன் ஏர் லைன்ஸ்சே நஷ்டத்தில் ஓடுகிறது. இழுத்து மூடும் அளவு இந்த கோர விமான விபத்துகள் உள்ளது. ஆனால் இதனை வைத்துக் கூட பெரும் பேரம் பேசப்படுகிறது.

No comments:

Post a Comment