Saturday, June 20, 2015

வெறும் மீன் பிடிப் படகில் அவுசி சென்று அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 2வர் கட்டநாயக்காவில் !

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது.
நீண்ட நாள் மீன்பிடிப் படகின் மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த இருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த 16 இலங்கையர்களில் இருவர் அங்கிருந்து நேற்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சிலாபத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும் உடப்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மற்றையவருமே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment