Saturday, June 20, 2015

காமுகனுக்கு 18 வயது சிங்கள மாணவி புகட்டிய பாடம்: பலர் அதிர்ந்துபோனார்கள் !

தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் தன்னை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிவரும் இந்த 18 வயது மாணவி அக்குரஸ்சை பகுதியில் தனியாக வந்துகொண்டு இருந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் அவர் நடந்து வரும்வேளை. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த வாலிபர் ஒருவர் , குறுக்கே வந்து அவரை மறித்துள்ளார்.
அவரை பலவந்தமாக இழுத்துச் சென்று ஓரமாக வைத்து கட்டிப் பிடித்து , கெடுக்க முனைந்துள்ளார். இதேவேளை தனது நாக்கை மாணவியின் வாய்க்குள் விட அவர் முனைந்தவேளை , காமுகனின் நாக்கை பலமாக கடித்துள்ளார் அந்த மாணவி. இதனை சற்றும் எதிர்பாராத காமுகன் , என்னசெய்வது என்று தெரியாது அலறியடித்துள்ளார். இதனைப் பாவித்து அம்மாணவி அங்கே இருந்து தப்பிவிட்டார். தப்பிச் செல்ல முன்னர் தனது செல் போனில் ,  மோட்டார் சைக்கிளை படம் எடுத்துக்கொண்டு தான் ஓடியுள்ளார். பின்னர் பொலிசாரிடம் சென்று மோட்டார் சைக்கிளின் படத்தை கொடுத்து முறைப்பாடு செய்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பதிவை வைத்து , அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்த பொலிசார் அவரை அடையாளம் காட்டச்சொல்லியுள்ளார். இதனையடுத்து அவரை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது.
http://athirvu.com/newsdetail/3836.html

No comments:

Post a Comment