Monday, June 22, 2015

ஈழப் பெண்ணை ஏமாற்றிய அ.தி.மு.க கவுன்சிலர்: 15 லட்சம் ரூபாவையும் ஆட்டையைப் போட்டார் !

தமிழகத்தின் திண்டுக்கல் அருகே நொச்சி ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 42). இவர் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இன் நிலையில் இவை அனைத்தையும் மறைத்து , ஈழப் பெண் ஒருவரை இவர் மணம் முடித்துள்ளார். திண்டுக்கல் அருகே நாகல் பகுதியில் சுமார் 2 வருடம் குடும்பம் நடத்தியும் உள்ளார். பின்னர் திடீரென அவர் வீட்டுப் பக்கம் வருவதை நிறுத்திவிட்டார். இதனால் விரக்த்தியடைந்த அப்பெண் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர் அவர்கள் உதவியோடு கவுன்சிலரை பற்றி விசாரித்தால் , அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியந்து அந்த ஈழப் பெண் கதிகலங்கிப்போனார்.
இது இவ்வாறு இருக்க , திண்டுக்கல்லில் அவர் வசித்து வந்த காலப் பகுதியில் சுமார் 15 லட்சம் ரூபாவை கவுன்சிலர் ஈழப் பெண்ணிடம் இருந்து பெற்றுள்ளார். குறித்த ஈழப் பெண்ணின் உறவினர்கள் சிலர் அவருக்கு இந்த பணத்தை கொடுத்துள்ளார்கள். இந்த 15 லட்சம் ரூபாவோடு அப்படியே ஆட்டையைப் போட்டு ஓடிவிட்டார் ஆ.தி.மு.க கவுன்சிலர். அம்மா ஆட்சியில் இப்படியா ஆ.தி.மு.காவினர் நடந்துகொள்கிறார்கள் என்று பல ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளது. அனாதரவாக இருந்த ஈழப் பெண்ணை ஏமாற்றியது மட்டும் இல்லாமல் , அவரிடம் பணத்தை அடித்துக்கொண்டும் ஓடியுள்ளார் இந்தக் கவுன்சிலர்.

No comments:

Post a Comment