Friday, June 19, 2015

யாழில் 11 வயது மாணவனிடம் "போதைப் பாக்கு" பாடசாலைக்கே சென்ற பொலிசாரால் பரபரப்பு !0 ]

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 6 (வயது 11) மற்றும் தரம் 7 (வயது 12) இல் கல்வி கற்கும் இரு மாணவர்களிடம் இருந்து போதை பாக்குகள் வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டன. மாணவர்களிடம் போதை பாக்கு உள்ளதாக வெளிவந்த ரகசிய தகவலினை அடுத்து யாழ்.மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் யாழ்.பொலிசார் இணைந்து பாடசாலைக்குள் சென்று மாணவர்களிடம் இருந்து போதை பாக்கினை கைப்பற்றினார்கள்.
போதை பாக்கு மீட்கப்பட்ட மாணவர்களிடம் யாழ்.பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மாணவர்களுக்கு போதை பாக்கினை விநியோகித்த சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யபட்ட நபரிடம் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தை சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபரினையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment