Friday, May 15, 2015

ஒரு நபரை ஆள் வைச்சு அடிக்காம தர்மடி வாங்கவைப்பது பற்றி இவங்க கிட்ட தான் கத்துக்கணும்


ஒரு நபரை ஆள் வைச்சு அடிக்காம தர்மடி வாங்கவைப்பது பற்றி இவங்க கிட்ட தான் கத்துக்கணும் போல இருக்கே ? என்ன நாம் சொல்ல வருவது புரியவில்லையா ? சில தினங்களுக்கு முன்னர் கட்டாரில் உள்ள ஷாப்பிங் செனரர் ஒன்றில் , ஒரு இளைஞனை சுமார் 100 பேருக்கு மேல் இணைந்து தர்மடி போட்டுக்கொண்டு இருந்துள்ளார்கள். போனவர் வந்தவர்கள் எல்லாருமே கேட்டுக் கேள்வி இல்லாமல் அந்த நபரை போட்டு அடித்துவிட்டுச் சென்றார்கள். அப்படி என்ன தான் அவர் செய்தார் என்று கேட்டால், ஸ்லாத்தை பற்றி தவறாக பேஸ்புக்கில் அவர் எழுதிவிட்டார் என்று யாரோ சும்மா கட்டுக்கதையை கிளப்பி விட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞருக்கு வேண்டப்படாத நபர் ஒருவர் ஷாப்பிங் காம்பிளக்சில் வைத்து இவ்வாறு ஒரு புரளியைக் கிளப்ப ,ஏன் எதற்கு என்று கேட்க்காமல் அனைவரும் அவரை நையப்புடைந்துள்ளார்கள் என்றால் பாருங்களேன். பின்னர் தான் பலருக்கு தெரியும் அவரிடம் பேஸ்புக் கணக்கே இல்லையென்று.

No comments:

Post a Comment