டெல்லியில் விஜயகாந்த் அனைத்துக் கட்சி குழுவினருடன் பிரதமரை சந்தித்த பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளரிடம் கோபமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விஜயகாந்த் செய்தியாளரிடம் தகராறு செய்த சம்பவத்தை வைத்து, தமிழ் ட்விட்டர் பயனாளிகள் #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க என்று ஒரு ஹேஷ்டேக் (HashTag) உருவாக்கி இந்திய அளவில் டிரெண்ட் செய்துள்ளனர்.
அனைத்துக் கட்சி குழுவுடன் பிரதமரை சந்தித்த விஜயகாந்த், டெல்லியில் பேட்டியளித்த போது தனியார் தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த விஜயகாந்த், 'மைக்கை தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க' என்று கூறியதோடு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
மேலும், மக்கள் மனதில் விஜயகாந்த் டெல்லிக்கு சென்ற மைய கருத்து மறந்துபோய் இப்போது அவரின் தகராறு நினைவில் நிற்கிறது.
|
No comments:
Post a Comment