Sunday, April 26, 2015

திருநங்கையை நிர்வாணப்படுத்தி, மொட்டை அடித்த பொலிசார்: உச்சக்கட்ட வெறிச்செயல்!

பிரேசில் நாட்டில் திருநங்கை ஒருவரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த பொலிசாருக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெரோனிகா பொலினா(Veronica Bolina-25) என்ற திருநங்கை உடலமைப்பை கவர்ச்சியாக வைத்துக்கொள்வதில் மிகவும் ஆர்வமுடையவர்.
இதனால், தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தனது அழகை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், அருகில் வசித்து வந்த முதியவருடன் தகராறில் ஈடுபட்டார் என Sao Paulo நகர பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் வெரோனிகாவின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்திய பொலிசார், அவரது தலை முடியையும் மொட்டை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
பொலிசாரால் மூன்று முறை கைது செய்யப்பட்ட வெரோனிகா பல்வேறு வகைகளில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதில், முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்களும் வீக்கங்களும் ஏற்பட்டுள்ளன.
வெரோனிகாவை சித்ரவதை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது குறித்து பேசிய சமூக ஆர்வலர்களில் ஒருவரான Susane Montalvo Sarabia, இந்த நவீன காலத்திலும் திருநங்கை ஒருவரை பொலிசார் கொடுமையாக சித்ரவதை செய்திருப்பது வேதனையை தருகிறது.
திருநங்கை என்ற ஒரே காரணத்திற்காக திட்டமிட்ட இந்த அநீதியை செய்து விட்டு தற்போது பொலிசார் அதை மறைக்க பார்க்கின்றனர். இதுபோன்ற ஒரு கொடுமை மீண்டும் நடக்காமலிருக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பொலிசார், சிறை அறையில் மற்ற கைதிகள் முன்னிலையில் பாலியல் செயலில் வெரோனிக்கா ஈடுபட்டார் என்றும் அதனால் கைதிகளுக்கு இடையே கலவரம் ஏற்பட்டதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த பதிலை ஏற்காத வெரோனிக்காவின் ஆதரவாளர்கள், போராட்டத்தை தீவிரப்படுத்துவதுடன் பொலிசார் மீது வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment