Monday, April 27, 2015

பிரான்சில் கொடூர விபத்து: இரு தமிழர்கள் பலி



பிரான்சில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்தில் இரு தமிழர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் லியோனில் இருந்து பரிஸ் வரும் A6 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 34 மற்றும் 21 வயதுடைய தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் இந்தக் கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த நெடுஞ்சாலையில் பயணித்த இரு இளைஞர்களும் தங்களது வாகனத்தை போக்குவரத்து நிறைந்த எதிர்த்திசையில் திருப்பி மிகவும் ஆபத்தான முறையில் சென்றுள்ளனர்.
இத்தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இந்த வாகனத்தை வழி மறைக்க பொலிஸார் முயன்றுள்ளனர்.
ஆனால் எதிரே வந்த RENAULT KANGOO வாகனத்துடன் இவர்கள் நேருக்கு நேராக மோதியுள்ளனர். இதில் ஒரு ஊர்தியும் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞர்கள் உட்பட, விபத்துக்குள்ளான மறை்றைய வாகனத்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் அவருடன் இருந்தவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் இருவரும் மதுபோதையில் வாகனத்தின் கதவுகளையும் திறந்து விட்டு நெடுஞ்சாலையில் அரைவட்டமாகத் திரும்பித் திரும்பி எதிர்த்திசையில் பயணம் செய்து விளையாடியபோதே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் ஒருவர் 34 வயதுடையவர் லியோனைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் 21 வயதுடைய ஓல்நே-சூ-புவாவைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

No comments:

Post a Comment