Wednesday, April 15, 2015

இளம்பெண்ணை மயானத்தில் வைத்து பலாத்காரம் செய்த மாணவர்கள்

கல்லூரி வளாகத்திலேயே மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்கள்
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 08:36.50 AM GMT +05:30 ]
ஹரியானாவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் இறுதியாண்டு மாணவர்கள் 3 பேர் முதலாமாண்டு மாணவியை பலாத்காரம் செய்தது அம்பலமாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இளம்பெண் ஒருவர் கடந்த 2013ம் ஆண்டு சட்டம் படிக்க சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதே பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் ஹர்திக் சிக்ரி என்ற மாணவரை காதலித்துள்ளார்.
ஹர்திக் தனது காதலிக்கு தன்னுடன் படிக்கும் கரண் சப்ரா மற்றும் விகாஷ் கார்க் ஆகிய இறுதியாண்டு சட்ட மாணவர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
ஹர்திக் அந்த பெண்ணை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பலாத்காரம் செய்ததோடு, அவரது நண்பர்கள் கரண் மற்றும் விகாஷ் ஆகியோரும் அந்த பெண்ணை பல்கலைக்கழக வளாகத்திலேயே பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்த 3 பேரில் ஒருவர் பலாத்காரம் செய்ததை புகைப்படம் எடுத்து வைத்ததோடு, இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் கடந்த சனிக்கிழமை பொலிசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவரது புகாரின்பேரில் அந்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ஹர்திக் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு, மற்ற இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



தர்மபுரியில் 9ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு சுடுகாட்டில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்துள்ள ஜடையம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதுள்ள மாணவி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன் தன்னை 5 மாணவர்கள் பலாத்காரம் செய்து அதை கைப்பேசியில் பதிவு செய்து மிரட்டி வருவதாகவும், 1098 என்ற சைல்டு ஹெல்ப்லைனுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து தருமபுரி மாவட்ட சைல்டு லைன் இயக்குனர் சைன்தாமஸ் மற்றும் ஆனந்தி அம்பிகா ஆகியோர் மாணவியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணைக்கு பின் தர்மபுரி ஆட்சியர் விவேகானந்தன் மற்றும் எஸ்.பி. லோகநாதனிடம் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரினை அடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் லோகநாதனின் உத்தரவின் பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு 6 பேரை பிடித்துள்ளனர்.
விசாரணையில், அந்த மாணவியை கடந்த 8ம் திகதி 3 பேர் ஆர்.கோபிநாதம்பட்டி மயானத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தபோது அவர்களுடன் இருந்த மாணவர் ஒருவர் தனது கைபேசியில் வீடியோ எடுத்தள்ளார்.
இதை அவர்கள் தங்களுடைய நண்பர்கள் மேலும் இருவருக்கு காட்டியுள்ளனர்.
பின்னர் அந்த இருவரும், மாணவியை தங்களது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை "வாட்ஸ்அப்பில்" வெளிட்டு விடுவதாக மிரட்டி கடந்த 10ம் திகதியன்று மாணவியை மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.



No comments:

Post a Comment