Monday, April 13, 2015

கிராம உத்தியோகத்தர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்க ஜனாதிபதி தீர்மானம்!

நாட்டின் சகல கிராம உத்தியோகத்தர்களுக்கும் சமாதான நீதவான் பதவிகளை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர் சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் வரவேற்பினை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு தீர்மானித்ததாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையை காத்திரமானதும் வினைத்திறனானதுமான வகையில் மேற்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிராம உத்தியோகத்தராக கடமையாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment