Tuesday, April 21, 2015

நடனமாடிய பெண்மீது 3 கோடி ரூபா காசை விட்டெறிந்த மக்கள் !

குஜ­ராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. எம்.பி. பூனம்பென் நடனம் ஆடிய 30 வினா­டி­களில் பார்­வை­யா­ளர்கள் ரூ.3 கோடி நோட்­டு­களை காற்றில் பறக்­க­விட்­டுள்­ளனர். குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்­டத்தில் உள்ள வெரா­வலில் பகவத் கதா என்ற நிகழ்ச்சி நடை­பெற்­றது.
அந்த நிகழ்ச்­சியில் பா.ஜ.க. எம்.பி. பூனம்பென் கலந்து கொண்டார். ஜாம்­நகர் பகு­தியில் இருந்து எம்.பி. ஆன அவர் பகவத் கதா நிகழ்ச்­சியில் பல­ருடன் சேர்ந்து நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடி­யதைப் பார்த்­ததும் பார்­வை­யா­ளர்கள் தங்­க­ளிடம் இருந்த ரூபாய் நோட்­டு­களை அவரை நோக்கி பறக்க விட்­டனர்.
வெறும் 30 வினா­டி­களில் ரூ.3 கோடி நோட்­டுகள் பறக்­க­வி­டப்­பட்­டன. நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த இடத்தில் பணக் குவி­ய­லாக இருந்­தது. 41 வய­தாகும் பூனம்­பென்னின் தந்தை 1972ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை­யி­லான காலகட்­டத்தில் 4 முறை சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்­தவர். ஒரு பெண் எம்.பி. நட­ன­மா­டி­யதற்கே ரூ.3 கோடி நோட்­டுகளை பறக்கவிட்டுள்ளார்களே என பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். 

No comments:

Post a Comment