Thursday, April 30, 2015

14 – 17 வயது காதல்.. துஷ்பிரயோகமும் நஞ்சு அருந்தலும்.. இலங்கையில்தான் நடக்கும் !


சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஈச்சிலம்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த திருகோணமலையைச் சேர்ந்த 17 வயது இளைஞனை சேருநுவர பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞனும் சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில் இளைஞன் சிறுமியை மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் புரிந்துள்ளார்.
இதனை ஏற்றுக் கொள்ளாத சிறுமி நஞ்சு அருந்தி ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந் நிலையில் இச் சம்பவத்தை அறிந்த சேருநுவர பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற் கொண்ட போது சிறுமி துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.குறித்த சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை சேருநுவர பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இதனை விசாரணை செய்த மூதூர் பதில் நீதிவான் எம்.ஏ.சீ.மகரூப் குறித்த இளைஞனை மே மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment