Thursday, April 30, 2015

தாயின் இரண்டாவது கணவன் கற்பழித்ததால் கர்ப்பிணியான 10 வயது சிறுமி !

பராகுவே நாட்டின் தலைநகரான அசுன்கியான் நகரை சேர்ந்த 10 வயது சிறுமி சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்துப் போனார். அந்த சிறுமியை அருகாமையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரது தாயார் அழைத்துச் சென்றார்.
பரிசோதனை நடத்திய டாக்டர்கள் அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் 21 வார கரு வளர்ந்து வருவதை கண்டுபிடித்தனர். இந்த கருவுக்கு யார் காரணம்? என தாயார் விசாரித்தபோது, அது தனது இரண்டாவது கணவரின் கைங்கர்யத்தால் வந்த வினை என்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து, அந்த கருவை கலைத்து விடும்படி நேற்று டாக்டர்களை கேட்டுக் கொண்டபோது, கருவைச் சுமக்கும் பெண்ணின் வயதையும், உடல் நிலையையும் கருத்தில் கொண்டு சட்டபூர்வ கருக்கலைப்புக்கு டாக்டர்கள் மறுத்து விட்டனர். இதனையடுத்து, கருவுற்ற பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனி வார்டில் வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறுமி பிரசவ தேதியை பீதியோடு எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.

No comments:

Post a Comment