Saturday, March 21, 2015

யாழ் பாடசாலையில் நச்சு தண்ணீர் : உண்மையில் நடந்தது என்ன ?

ஏழாலையில் உள்ள ஸ்ரீமுருகன் மகா வித்தியாலயத்தின் தண்ணீர் தாங்கிக்குள் , இனந்தெரியாதோர் நஞ்சு கலந்துள்ளனர் என்ற செய்தியை நீங்கள் ஏற்கனவே படித்து இருப்பீர்கள். இதனால் சில மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளார்கள். இது யாவரும் அறிந்த செய்தி ... ஆனால் அறியாத செய்தி ஒன்றும் உள்ளது. யாழில் தற்போது பல கடைகளில் போத்தல் தண்ணீர் விற்பனைக்கு வந்துள்ளது. அதுபோக கொழும்பில் இருந்து பெருவாரியாக இறக்கப்படும் இந்த போத்தல் தண்ணீரை யாழ் மக்கள் வாங்கிக் குடிப்பது இல்லை. காரணம் என்னவென்றால் யாழ் தண்ணீர் பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. அது மிகவும் சுத்தமான நல்ல தண்ணீர். அதுபோக ஏழாலையில் உள்ள பல கடைகளில் இந்த போத்தல் தண்ணீர் சில நாட்களுக்கு முன்னரே விற்பனைக்கு வந்துள்ளது.
பாடசாலை தண்ணீர் தொட்டியில் நஞ்சு கலந்த விடையத்தால் ஆடிப்போன பல பெற்றோர்கள் தற்போது தமது பிள்ளைகளுக்கு போத்தல் தண்ணீரையே கொடுத்து விடுகிறார்கள். அதுவே பாதுகாப்பனது என்று , சிலர் அறிவுரை கூறிவருகிறார்கள். இதனால் தற்போது ஏழாலையில் மட்டும் அல்ல யாழ் டவுனிலும் அதனை அண்டிய பல பகுதிகளிலும் , போத்தல் தண்ணீர் விற்க்க ஆரம்பித்துள்ளது. பல பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு இந்த போத்தல் தண்ணீரை வாங்கிக் கொடுக்க முண்டியடிப்பதாக அதிர்வின் யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது திட்டமிடப்பட்டு நடக்கும் ஒரு செயல் எனவும். கொழும்பில் இருந்து போத்தல் தண்ணீரை யாழுக்கு இறக்குமதி செய்யும் தாதா கும்பல் ஒன்றே இவ்வாறு புரளிகளைக் கிளப்பிவிடுவதோடு, இது போன்ற தீய செயல்களில் ஈடுபட்டும் வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுபோல சுண்ணாகத்தில் கழிவு எண்ணையை மண்ணில் விட்டு அப்பகுதி குடி தண்ணீரை நாசமாக்கினார்கள். அங்கே உள்ள மக்களும் குடி தண்ணீருக்கு போத்தல் தண்ணீரையே பெரிதும் பாவிக்கிறார்கள். இதுபோன்ற திட்டமிடப்பட்ட நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது என்கிறார்கள் யாழ் புத்திஜீவிகள். இதில் டக்ளஸ் ஒட்டுக்குழுவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு கமிஷன் கொடுக்கப்படுகிறது என்ற செய்தியும் உலாவருகிறது.
http://www.athirvu.com/newsdetail/2647.html

No comments:

Post a Comment