ஆண்களுக்கு இடையில் ஓரின சேர்கைகள் அதிகரித்துள்ளதால், இலங்கையில் எயிட்ஸ் நோய் பரவுதல் அதிகரித்துள்ளதாக பாலியல் நோய்களை தடுப்பது தொடர்பான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளை விட கடந்த 2014 ஆம் ஆண்டு எச்.ஐ.வி. உட்பட பாலியல் நோய்களின் பரவல் அதிகரித்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
24 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களின் ஓரின சேர்கைகள் அதிகரித்து இருப்பதே இதற்கு காரணம் எனவும் அந்த அமைப்பின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே கூறியுள்ளார்.
கடந்த வருடம் எச்.ஐ.வியை தவிர ஹர்பீஸ், கோனோரியா, சிபிலிஸ், ஹெபடைடீஸ் பீ. ஸ்கேபிஸ் போன்ற பாலியல் நோய்கள் அதிகரித்துள்ளன.
ஆண்களின் ஓரினசேர்க்கை, இயற்கைக்கு மாற பாலுறவு மற்றும் ஓரினசேர்க்கை ஆகிய இரண்டிலும் ஈடுபடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே அதற்கு காரணம் எனவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நபர்கள், கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment