Monday, March 30, 2015

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை! முஸ்லிம் மாணவி தற்கொலை முயற்சி



ஹற்றனில் முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 09:14.09 AM GMT ]
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று பகல் 12.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கண்டியிலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுடன் ஹற்றனிலிருந்து வட்டவளை ரொசல்ல பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி செனன் வூட்லேண்ட் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாரதி சிறுகாயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவா் ரொசல்ல பகுதியை சேர்ந்த எம்.சுரேஷ்குமார் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை! முஸ்லிம் மாணவி தற்கொலை முயற்சி
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 09:34.05 AM GMT ]
இன்று வெளியான 2014ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லையென முஸ்லிம் மாணவியொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மதுரங்குளிப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவியே வீட்டில் இருந்த மருந்துகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் அறிந்து உடனே மாணவியை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த மாணவி தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx4C.html

No comments:

Post a Comment