Wednesday, March 25, 2015

சென்னை மாணவி கண்டுபிடித்த நவீன குப்பைதொட்டி! பிரதமர், ஜனாதிபதி பாராட்டு

சென்னையை சேர்ந்த பிரியங்கா மதிக்ஷரா என்ற மாணவி நவீன குப்பைதொட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியங்கா மதிக்ஷரா.
இவர் நவீன குப்பைதொட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார், இது செயல்படும் விதம் குறித்து ஜனாதிபதி மாளிகையில் செய்து காட்டினார்.
அங்கேயே இரண்டு வாரங்கள் தங்கியிருந்து புதுமையான குப்பைதொட்டியின் செயல்பாடு குறித்து விளக்கமளித்தார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல நிறுவனங்களின் உயரதிகாரிகளையும் சந்தித்து அவர்களது பாராட்டுகளையும் பெற்றார்.
இந்த புதுமையான கண்டுபிடிப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment