Saturday, March 21, 2015

திருமதி சந்திரகாந்தி பிரபாகரன் மரண அறிவித்தல்!

பிறப்பு : 14 மே 1964 — இறப்பு : 18 மார்ச் 2015

(முன்னாள் விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம் உயிரியல் துறை)


யாழ். கொக்குவில் கிழக்கு மணியகாரன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகாந்தி பிரபாகரன் அவர்கள் 18-03-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம், செல்லம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரியும், அருணாசலம், காலஞ்சென்ற பத்மநிதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவமுரளிதரன், பிரசாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரகாந்தன்(துபாய்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

கிருபாகரன் தவமலர், திவாகரன் நிறோஜனா, அருள்நிதி ஜீவானந்தன், இசைவாணி நிர்மலன், லலிதா பகலவன், கோமதி சந்திரகாந்தன்(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிரபாகரன்(கணவர்- லண்டன்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 23/03/2015, 11:00 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, United Kingdom.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 23/03/2015
முகவரி: St Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, United Kingdom.
தொடர்புகளுக்கு
பிரபாகரன்(கணவர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447551804691

http://www.kallarai.com/ta/obituary-20150321210347.html

No comments:

Post a Comment