Sunday, March 22, 2015

லண்டனில் இந்தியச் சிறுவன் வெள்ளைச் சிறுவனை கொன்ற சம்பவம்: 8 மாத சிறை தண்டனை !

பிரித்தானியாவில் தன்னை பகிடி செய்வதாக நினைத்த சிறுவன் ஒருவன், வெள்ளை இன சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். தனது உறவினர் கடையில் நின்றுகொண்டு இருந்த இந்திய வம்சாவெளி சிறுவன் ஒருவர்(16) அக் கடைக்கு வந்த வெள்ளை இன இளைஞர்(16) ஒருவரோடு சண்டையிட்டுள்ளார். குறித்த வெள்ளை இனச் சிறுவன் கங்கம் ஸ்டைலில் நடனம் ஆடியுள்ளார். அது தன்னை பார்த்து பகிடி பண்ணும் விதத்தில் உள்ளது என்று நினைத்த இந்த இந்தியச் சிறுவன் அவரை தாக்கியுள்ளான்.
நிலத்தில் வீழ்ந்த குறித்த வெள்ளை இனச் சிறுவன் தலை அடிபட்டி பரிதாபமாக இறந்து போனார். ஆளைக் கொலை செய்த வழக்கு இந்திய சிறுவன் மீது பதிவாகி இருந்தது. பொலிசார் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என அதிர்வு இணையம் அறிகிறது. இந்தியச் சிறுவன் குறித்த வெள்ளை இனச் சிறுவனை , வேண்டும் என்றே கொலை செய்யவில்லை என்று நீதிமன்றம் கருதியதால் , அவனுக்கு வெறும் 8 மாதங்களே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/2650.html

No comments:

Post a Comment