Monday, February 9, 2015

கண் சிமிட்டி கொலையாளியை காட்டிக் கொடுப்பாரா கோமா நிலையில் உள்ள பெண்: அதிரும் தகவல் !

லண்டனில் இனி "மினி கப்" க்கு ஆப்பு: ஆளே இல்லாத கார் சிறுவர்களை பள்ளிக்கூடத்திற்கு கொண்டு

[ Feb 09, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 17085 ]
லண்டனில் வசிக்கும்பெரும்பாலான பெற்றோர்களது சுமை நீங்க உள்ளது. காலையில் எழுந்து வேலைக்குச் செல்வதா ? இல்லை பிள்ளையை பள்ளிக்கூடம் இறக்கிவிட்டு வேலைக்குச் செல்வதா என்ற பெரும் பிரச்சனை பெற்றோர்களுக்கு உண்டு. இதனால் சிலர் வேகமாக வாகனத்தை செலுத்துகிறார்கள். மேலும் சிலர் மினி கப் என்று சொல்லப்படும் டாக்சியை பிடித்து பெரும் பணத்தை செலவுசெய்து பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்புகிறார்கள். இன் நிலை விரைவில் மாற்றம் அடைய உள்ளது. ஆம் ! சாரதி இல்லாமல் ஓடும் வாகனத்தை(கார்களை) அனுமதிப்பது என்று பிரித்தானிய அமைச்சர்கள் முதன் முறையாக தீர்மானித்துள்ளார்கள். சாரதி காரில் ஏறாமலே, கார் செல்லும். அதில் உங்கள் பிள்ளைகளை நீங்கள் ஏற்றி விட்டால், அது பள்ளிக்கூடம் சென்று அவர்களை இறக்கிவிட்டு, மீண்டும் அது வீடு வந்து சேர்ந்துவிடும்.இதற்காக அனுமதியை பிரித்தானிய போக்குவரது அமைச்சர் வழங்கவுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.
இதுபோன்ற கார்களை ஏற்கனவே பல நிறுவனங்கள் தயாரித்து விட்டது. குறிப்பாகச் சொல்லப்போனால், 1999 இல் இதுபோன்ற கார்களை கம்பெனிகள் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்தும் விட்டது. ஆனால் பல நாடுகளில் இதற்கான அனுமதிதான் கிடைக்கவில்லை. கடந்த 6 மாதங்களாக பிரித்தானியாவில் உள்ள பல அமைச்சர்கள் , இது தொடர்பாக ஆராய்ந்து வந்துள்ளார்கள். மேலும் அவர்கள் இதுபோன்ற தானியங்கி கார்களை இயங்கச் செய்து அதனுள் உட்கார்ந்து பரிசோதனை நடத்தியுள்ளார்கள். என்ன ஆச்சரியம் ! ஒரு மனிதன் காரை ஓட்டுவதை விட மிகவும் துல்லியமாக அந்த கம்பியூட்டர் கார்கள் ஓடுகிறது. ஆபத்தை முன் கூட்டியே அறிகிறது. சடுதியாக பிரேக் போட்டு பெரும் விபத்துக்களை தவிர்கிறது. இதனைப் பார்த்து அமைச்சர்கள் அதிர்ந்துபோனார்கள். தொழில் நுட்ப்ப வளர்ச்சி இவ்வளவு தூரம் வளர்ந்த பின்னர் , அதனை நாம் அனுமதிக்காது போனால் நல்லதல்ல என்று அவர்கள் தீர்மானித்துள்ளார்கள்.
இன்னும் சில மாதங்களில் தானியங்கி(ஆட்டோமெட்டிக்) கார்கள் விற்பனைக்கு வரவுள்ளது. அதனை நீங்கள் வாங்கினால் போதும். நீங்கள் காரில் இருக்கவேண்டும் என்ற அவசியமே இல்லை. அது போகவேண்டிய இடத்திற்கு தானாகவே செல்லும். நீங்கள் காரில் வேண்டும் என்றால் சும்மா உட்காந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கலாம்.மேலும் காலை எழுந்து பிள்ளையை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு, கார் திரும்ப வீடு வந்ததும் வேலைக்குச் செல்லலாம். அட உலகம் எப்படி மாறப்போகிறது பாருங்கள்.
அதிர்வுக்காக
வல்லிபுரத்தான்.
http://www.athirvu.com/newsdetail/2219.html

ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்துவதில் இருந்து எப்படி தப்பிப்பது ? புது பயிற்சிகளை வழங்க !

[ Feb 09, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 10500 ]

பிரித்தானிய ராணுவத்தினர் மற்றும் மேற்குலகை சேர்ந்த நபர்கள் , ஐ.எஸ் (ISIS) தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்வது வழக்கம். அவர்கள் வீடியோ எடுத்து அதனைக் காட்டுவதும். பின்னர் கத்தியால் வெட்டி கொலைசெய்து அதனை இன்ரர் நெட்டில் வெளிவிடுவதும் வழமையாகிவிட்டது. இதனை எவ்வாறு தடுப்பது ? இல்லையென்றால் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஒருவரை பிடிக்க முனைந்தால் அவர்கள் எதனை முதலில் செய்கிறார்கள் ? என்பது எல்லாம் புரியாத புதிராகவே இருந்து வந்துள்ளது. தமக்கு வேண்டப்படும் நபர்களை , ஐ.எஸ் தீவிரவாதிகள் எவ்வாறு உயிரோடு பிடிக்கிறார்கள் என்ற தகவல்கள் இதுவரை நுணுக்கமாகவே இருந்து வந்துள்ளது எனலாம். அவர்கள் தமக்கு வேண்டப்பட்ட நபர்களை பிடிக்கும் விதமே தனி ,என்கிறார்கள் விடையம் அறிந்த சிலர்.
மயக்க ஊசி போட்டு கடத்துவது. நண்பர்களைப் போல பழகி பிஸ்கட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுப்பது என்று , பல டெக்னிக்கை வைத்திருக்கிறார்கள் இந்த ஐ.எஸ் தீவிரவாதிகள். இவர்கள் கைகளில் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள வெளிநாட்டவர்கள் தான் சிக்கிக்கொள்கிறார்கள் என்று நாம் நினைத்தால் அது ஒரு முட்டாள் தனம் ஆகும். இவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து ஆட்களை கடத்துகிறார்கள். இதனை எவ்வாறு தடுப்பது ? எவ்வாறு அறிந்து கொள்வது ? என்பது தொடர்பான ஒரு பயிற்சி திட்டத்தை பிரித்தானியா ஆரம்பித்துள்ளது. இதுவரை காலமும் நடைபெற்ற கடத்தல் சம்பவங்களை அனுபவமாகக் கொண்டு இந்த பயிற்சி திட்டம் நடைபெற்று வருகிறதுஎன்கிறார்கள். பலிக்குமா பிரித்தானியாவின் பாச்சா ? தெரியவில்லை.
http://www.athirvu.com/newsdetail/2220.html

கண் சிமிட்டி கொலையாளியை காட்டிக் கொடுப்பாரா கோமா நிலையில் உள்ள பெண்: அதிரும் தகவல் !

[ Feb 09, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 18255 ]
தென்னாபிரிக்காவில் உள்ள ஸ்டெல்லின் -பொஷ் என்னும் நகரில் , ஒரு குடும்பம் வசித்து வந்தது. இரண்டு அண்ணாவுக்கு ஒரு பெண் சகோதரியாக இருந்தார் மார்லிவ். இவர்கள் பெற்றோருடம் வசித்து வந்தார்கள். கடந்த ஜனவரி 27 அன்று இரவு வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர், கோடரியால் அம்மாவையும் அப்பாவையும் வெட்டிக் கொன்றுவிட்டார். இன் நிலையில் தடுக்கச் சென்ற மூத்த அண்ணாவையும் அவர் வெட்டிக் கொன்றுவிட்டு, இளைய சகோதரனையும் தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த மார்லிவ் அதனை தடுக்க முயன்றுள்ளார். கொலைகாரன் மார்லிவ்வை, தலையில் பலமாக தாக்கி பின்னர் கழுத்தை வெட்டி விட்டான். இந்த சமயத்தில் அங்கிருந்து காயங்களோடு தப்பித்த இளைய சகோதரர் பொலிசாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குற்றுயிராக இருந்த மார்லிவ்வை , வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். மார்லிவ் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் என்ன ஆச்சரியம் அவர் இறக்கவில்லை. 16 வயதாகும் அவர், தற்போது உடல் நிலை தேறிவருகிறார். ஆனால் அவரால் பேசமுடியாது. கைகளை அசைக்க முடியாது என்று பல குறைபாடுகள் இருக்கிறது. இருப்பினும் அவருக்கு நினைவு திரும்பிவிட்டது என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். 5 ந்தும் 5 ந்தும் பத்து தானே என்று கேட்டால் அவர் உடனே கண்களை அசைக்கிறார். சரியான விடைக்கு மட்டும் அவர் கண் சிமிட்டி சமிஞ்சையை கொடுக்கிறார். இதனால் பொலிசார் சற்று உட்சாகம் அடைந்துள்ளனர். ஏன் என்றால் , கொலையாளியை நேரில் பார்த்த சாட்சி இவர் மட்டுமே. இளைய சகோதரார் தப்பி இருந்தால் கூட, அவர் கொலையாளியை சரியாகப் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே சந்தேக நபர்களின் புகைப்படங்களை காட்டில் பொலிசார் கேட்டால் , கண் சிமிட்டியே கொலையாளியை காட்டிக்கொடுத்துவிடுவார் இப் பெண்... திக் திக் நிமிடங்கள் தான்....
http://www.athirvu.com/newsdetail/2221.html

No comments:

Post a Comment